KAMUTHY PALAI – 5

ஆருயிர்க்கு அமுதம் நீ !

அருள் மறை சுகிர்தம் நீ !

அகதிகள் தஞ்சம் நீயே !

அலைகடல் மீதிலும்

கடும் புயல் காற்றிலும்

ஆபத்து வேளைதனிலும்

சீருடன் வந்து

கை தூக்கியே காக்கும்

செம்மலும் நீயே !

திடமும் நீயே !

தேடிவரும் சேயர்தம்

பீடையும் பிணிகளும்

தீர்க்குமோர் வைத்யர் என்று

பாருலகோர் புகழ்பாடுதல் கண்டு கேட்டு

பாலகர் தாம் யாம் தேடி வந்தோம்.

பரமனை வேண்டி

திருவருள் புரியும் தவயோகியே !

பாருலக சேவடி

காவல் தந்தாதரி

தமியோர்களின் ஆவல் இதுவே

கமுதியம்பதி வளர்

கருணையம் புணரியே

சந்த அந்தோனி முனியே !

This is a simple request for eternal grace to be obtained from our lord and shower it on the devotees.

by A. X. Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *