சத்திய வேதமறைதனைச்
சரிவரக் கரை கண்ட
தரும நெறியான குருவே !
பக்தியுடன் திருச்சபையை
இஸ்பானிய தேசந்தனில்
பரப்பிய வேதமுனியே !
சிற்றினொரு ஏசுபாலகனை
செங்கரத்தில் ஏந்திட்ட
திருவரள் பெற்ற சீலனே !
சிற்றின்ப ஆசைதனை
முற்றும் தள்ளிய
செல்வமே ! இரத்தினமே !!
மடுத்தின் பாலா ! பத்தரை மாத்து தங்கமே !
பதுவை அந்தோனி மாமுனியே
கமுதி நகர் தங்கிய
கரை கண்ட எம் குருவே
மேகத்தின் மின் ஒளியும்
முகமது சுடரொளியும்
பவளமணி பொன்னிறமே !
மாந்தை மணிமகுட கிரீடமும்
இராச மகுடமும் அணிந்த குருவே !
சிலுவையை கரத்தினில் ஏந்திய
எத்திசையும் பேறு பெற்ற
எம் தந்தை
சந்த அந்தோனி மாமுனியே.
furnished by A.X.Alexander