Kamuthy Palai 6

சத்திய வேதமறைதனைச்

சரிவரக் கரை கண்ட

தரும நெறியான குருவே !

பக்தியுடன் திருச்சபையை

இஸ்பானிய தேசந்தனில்

பரப்பிய வேதமுனியே !

சிற்றினொரு ஏசுபாலகனை

செங்கரத்தில் ஏந்திட்ட

திருவரள் பெற்ற சீலனே !

சிற்றின்ப ஆசைதனை

முற்றும் தள்ளிய

செல்வமே ! இரத்தினமே !!

மடுத்தின் பாலா ! பத்தரை மாத்து தங்கமே !

பதுவை அந்தோனி மாமுனியே

கமுதி நகர் தங்கிய

கரை கண்ட எம் குருவே

மேகத்தின் மின் ஒளியும்

முகமது சுடரொளியும்

பவளமணி பொன்னிறமே !

மாந்தை மணிமகுட கிரீடமும்

இராச மகுடமும் அணிந்த குருவே !

சிலுவையை கரத்தினில் ஏந்திய

எத்திசையும் பேறு பெற்ற

எம் தந்தை

சந்த அந்தோனி மாமுனியே.

furnished by A.X.Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *