இரு சிறு கவிதைகள்

A . S .வில்லவராயன்
(1947 – பனிமய மலரிலிருந்து)
”சில வருடங்கட்கு முன் பரோடா மகாராஜா கன்னியாகுமரிக்கு விஜயம் செய்யும் பொழுது, நம் நிலையை கண்ணுற்று மனம்தாளாது, கூறியதாக நம் வித்துவான் ஒருவர் பாடி இருப்பதாவது:-

பார்த்திபன்; பரோடா தேசத்தை ஆளுபவன்
பரதரைக் கன்னியாகுமரியில்
பார்த்துப் பகர்ந்த மெய்மொழியை நீயும்
பாரினில் கேட்டிலையோ!
அந்த நாளுங்களைக் காத்த முனிவராம்
அன்பு வளரும் பிதா சவியர்
இந்த நாளுங்களைக் கண்டால் அவருமே
ஏங்கி அழுவார் என்றுரைத்தான்
ஒற்றுமை கெட்டதும்
கல்வி குறைந்ததும்
உட்பகை விரோதமதனால்;
கொற்றவன் பரோடா வள்ளல் இவ்வாறு
கூறினான் இது உண்மை என கும்மியடி – “

*மற்றுமொரு கவிதை :-*

”உங்கள் நிலைதனை உயர்த்துகிறேன் கல்விதனைத் தருகிறேன்” என நம்மிடம் சொன்ன பிக்ஷப் கால்டுவெல்லிடம் நம்மவர் என்ன பதிலுரைத்தார் என நம் வித்துவான்களில் ஒருவர் பாடி இருப்பது :-
“கால்டுவெல் எனுப் பெரியோன்
மந்த்ரவூர் கட்டினான் ; பாடசாலை கட்டினான்.
பரதருக்காய் !
பால்மணம் மாறா பால பரதர்கட்கு
பந்நூலும் ; ஆடையும் ; ஊண் உணவும்
தருவேன் என்றான்.”
சொன்ன பதிலென்ன?
நால்வகை சேனை தந்து – “எமை
நர பதியாக்கிடினும் – நஞ்சுயீன
பால்துளி கலக்க வொண்ணாது எனப்
பகர்ந்தார் – கால்டுவெல் மனம் சோர்ந்தார்.
இத்துணை வைராக்யம் தம் மதத்தில்
இசைந்த பரதர்கட்கு உயர்கல்வியை
சித்தம் மகிழ்ந்தூட்ட – ஏற்பாடு
செய்தவர் இதுகாறு ஒருவருமில்லை.”

The offer of Bishop Caldwell was reportedly frowned by the paravas, as it was an offer by a protestant Bishop to us – the paravas who were staunch catholics.

That is why the verse “நஞ்சுடனே பால்துளி கலக்க வொண்ணாது”.

It used to be exclaimed “பரவனும் பதிதன் ஆவானோ!”

-Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *