ஆருயிர்க்கு அமுதம் நீ !
அருள் மறை சுகிர்தம் நீ !
அகதிகள் தஞ்சம் நீயே !
அலைகடல் மீதிலும்
கடும் புயல் காற்றிலும்
ஆபத்து வேளைதனிலும்
சீருடன் வந்து
கை தூக்கியே காக்கும்
செம்மலும் நீயே !
திடமும் நீயே !
தேடிவரும் சேயர்தம்
பீடையும் பிணிகளும்
தீர்க்குமோர் வைத்யர் என்று
பாருலகோர் புகழ்பாடுதல் கண்டு கேட்டு
பாலகர் தாம் யாம் தேடி வந்தோம்.
பரமனை வேண்டி
திருவருள் புரியும் தவயோகியே !
பாருலக சேவடி
காவல் தந்தாதரி
தமியோர்களின் ஆவல் இதுவே
கமுதியம்பதி வளர்
கருணையம் புணரியே
சந்த அந்தோனி முனியே !
This is a simple request for eternal grace to be obtained from our lord and shower it on the devotees.
by A. X. Alexander