– பேராசிரியர் ம.ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
தன்னுடைய சபையின் தலைவருக்கு 1644ல் அருட்தந்தை லோபே எழுதிய கடிதத்திலிருந்து திருநெல்வேலி பகுதி முழுவதும் கத்தோலிக்க பரதவக் குழுக்கள் பரவி இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. Continue reading நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்
பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டவியல் பட்டமும் பெற்ற தே.கு ஜான், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உவரியில் தோன்றியவர். ‘தினமலர்’ நாளிதழில் துணை ஆசிரியராக பணி புரிந்த ஜான், உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆனார். மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் தமிழக அரசின் வேளாண்மைத் தொழில் வாரியச் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். 