ஆண்டவனின் பூந்தோட்டம்
அருள் மறையோர் திருக்கூட்டம்
அதிலே ஒரு மலரானாய் !
அழகும் குணமும்
மணமும் நிறைந்தாய் !
அடக்க அன்பு அருளோடு
அனைத்துலகும் கொண்டாடும்
அந்தோனி மாமுனியே !
வேண்டிய வரமருளும் மன்னவனே ! விண்ணவனே
வேதாந்தக் கடல்கடந்த
வித்தகனே ! உத்தமனே !!
மணிக்கரத்தில் ஏசுபிரான்
மகிழ்ச்சி கொள்ளும் மர்மமென்ன ?
மழைமுகிலும் உமது சொல்லால்
மறைந்து போன மாயமென்ன ?
கமுதையும் நற்கருணையில் இருக்கும்
கடவுளைத் தொழுத கதை என்ன ?
இடி பெருங்காற்று மழையில் – ஒரு
பெண்மணி நனையாமல் இருந்த புதுமை என்ன ?
வென்னீரில் விழுந்து இறந்த பிள்ளை
பன்னீரில் விளையாடும் விதமென்ன ?
காணாமல் போன பொருட்கள்
கையில் கிடைக்கும் புதுமை என்ன ?
எண்ணிடவும் ; எழுதிடவும்
இயலுமோ இப்பாரினில் ?
நன்நாக்கு அழியா நற்றவரே !
நானிலமும் வானிலமும்
வாழ்வளிக்க வந்தாய்
வளர்கரத்து ஏசுவுடன் –
அவர் வரமருள வேண்டுவாய்
சந்த அந்தோனி மாமுனியே.
The Palai recalls various miracles performed by St. Antony and makes a fervent plea for grace of the lord on the congregation.
furnished by A.X. Alexander