ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட்டில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 12 இளையோர்களில் ஒருவராக கலந்துகொண்டு திரும்பியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷேரோன் ரோக் கொரைரா (Sharon Roque Corera). நம் இனத்தைச் சேர்ந்த இவர் தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகின்றார். தனது இளநிலை ஆங்கில இலக்கியத்தில் (B.A.Literature) தங்கப்பதக்கம்தனை அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெற்றவர்.
World Youth Day – இவ்வாண்டு ஸ்பெயின் தேசத்தில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற இவ்விழாவின் இறுதி நாளான 21-ம் தேதியன்று போப் பெனடிக்ட் இவ்விழாவினை சிறப்பித்தார்.
இவ்விழாவில் கலந்துகொள்ள, கல்லூரி மாணவ மாணவியருக்கென்றே இயங்கிவரும் அகில இந்திய கத்தோலிக்க மாணவர் கூட்டமைப்பில் (All India Catholic University Federation) இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 12 இளையோர்களில் ஷேரோன் ரோக் கொரைராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் இவர் ஒருவரே.
நன்றி : அலைவாய்க்கரை
நம் பரவர் இனத்தைச் சேர்ந்த வர்களால் நடத்தப்படும் matrimonial website http://www.matriman.com நமது சமுதாயத்திற்கு சலுகை உண்டு
johnmiltonfernando