Category Archives: Our Communities

திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளது கிரீடாதாரணத்தின் போது பாடிய பதினான்கு சீரிரட்டை

இந்த மீண்ட முடிதனை திரும்ப சூட்டிய போது பாடப்பட்ட கவிதைகளை கீழே தந்துள்ளோம். இரண்டாம் கவிதையை படிக்கப் படிக்க, நமது புலவரின் தமிழ் அருமை தெளிவாக தென்படும்.

திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளது கிரீடாதாரணத்தின் போது பாடிய பதினான்கு சீரிரட்டை

ஆசிரிய விருத்தம்

வானாடு செல்வமே, வரையாடு தீபமே
வான்மக ராஜேஸ்வரியே.
வற்றாத கேணியே பரலோக ஏணியே
வாடாத நறிய பூவே.
மறையவர் இன்பம் நீ மறைக்கொரு பிம்பம் நீ
மாசிலா வடிவம் நீயே.
மன்னவர் மகுடம் நீ மகிதல சிகரம் நீ
மகத்துவ சொரூபம் நீயே,
தேனாடு மலரடி திருமந்த்ர நகரினைத்
திருக்கோவில் கொண்ட நாளாய்
செய்தமா நன்மையை எழுதவோ நினைக்கவோ
செப்பவோ முடியாதம்மா.
செய்ந்நன்றி கொன்றவர் சிறுதொழில் வஞ்சகர்
தீயவர் நினக் கிழைத்த
செயலரும் நிந்தையை நினைக்கவுந் துடிக்குதே
திருவுளம் சகித்த தென்னே.
மானாடு நின்விழா நிறைவுற்ற தினமாறு
மதிக்குமா வணி நாள் பத்து
வளரிருட் போதுநிற் பதமுறை யலகையின்
வலைப்படு கயவ ரந்தோ.
வல்லபீ! நினதுடுச் சிரமிசை துலங்குமா
மணிமுடி கவர்ந்து செல்ல;
மைந்தரும் மாதரும் மனமொடிந் திருகணீர்
வடித்தவர் தொழுதல் கண்டு
மீனாடு நின் முடி அலையோரங் காணவே
மிகு புதுமை செய்த தாயே
மிளிர்வடி விழந்ததை யியல்வரை திருத்தியுன்
வியன்சிர ஸமைக்க வேண்டி
விசித்தமா மகுடமிது; விருப்பமுட னேற்றருள்
விரிமழை பொழிவா யம்மா
மிகுமந்த்ர நகர்தந்த திருமந்த்ர முறைசந்த
மரியதஸ் நேவிஸனையே.
இராகம் செஞ்சுருட்டி (லாவணி) தாளம் ஆதி
அகிலமனைத்து மொரு மொழியிலமைத்த திரு
அமலன் திருக்கரத்தி லிருக்க
இளம்பிறையுடு சுடர்கதி ரெறிக்க
மணி-மகுடமதனை யபகரிக்க
வந்த-அதிசயமிதை விரித்துரைக்க
முடி-யாதுநிச்சய மாகு மற்பவி
வேகி யெப்படி யோதமுற்படல்
ஐயோ-கொடியர் நெஞ்சமுருக்கு
இந்த அவமதிக்கெவர் மனச்செருக்கு
திருட்டுத் தொழில் நடத்தப்
பொருத்த முறு கனத்த
இருட்டுப் பொழுதிலையோ பாவியே
திரி-புவனமாள் திவ்ய பிரதாபியே
வளர்-திருப்பதிமிசை வந்துலாவியே
அவள்-இருக்கும் இருப்பிட்த்தைத் தாவியே
துணி-வேதுபெற்றதோர் தாயிலுத்தம
தாய் சிரத்தினிலே ஜொலித்திடு
மகுடமெடுத்த பச்சை நாவியே
உன்னை-மன்னித்தாள் எங்கள் மஹாதேவியே
தட்டுமணிக் கயிற்றை
வெட்டித் தட்டினுட்
புறத்திற் கட்டியது தொங்கவிட்ட சூது
மெல்லப் பற்றிப்பற்றிக் கீழிறங்க ஏது
கடை-கெட்ட துட்டச் செய்கையன்றோ ஈது
மதி தட்டுக்கெட்டுப் போனவகையாது
மட-மாதருக்குள தீதபொற்புயர்.
தாய்மலர்ப்பத சேவை நிற்பவ
ராரோ அவர்க்கு நிறைபாது
தந்-தாதரிப்பாள் குறை யாது
இரக்கமெனும் புனலைச்
சுரக்குந் தடாக மவள்
எவர்க்கும் நல்லுப காரியல்லவா
இதை-ஏனோமறந்தாய் மஹா வல்லவா
அன-லெரிவாய் நரகக்குழி செல்லவா
இடர் எண்ணினாய் உனக்கிது நல்லவா
அவளற்புதச்சொரு பத்தினித்தெரி
சித்த வர்க்கதி சித்திவிர்த்திக
ளெய்துமெனல் பழமை யல்லவா
இதை-எடுத்து விரித்துனக்குச் சொல்லவா
பால்சுரக்கும் பான்மடுவைத்
தானறுத்துப் பால் குடிக்க
வே நினைத்த பான்மையது நோ
சதி-காரரிருள் சூழுமந்தகார
வேளை-யாருமறியாது வந்தபார
உபகாரி யெமதன்னை சிரோபார
முடி-பற்றியோடிய வெற்றி தானென
உற்றதோர் மனம் பற்றுதே நனி
பசிப்பிணி வறுமை நோய் தீரத்
தகு-வழியவளிணையடி சார
அண்டினவர்க் கபய
மென்றும் அளிப்பாளென
அன்றுபெர்நர் துரைத்தவாக்கு
அது-குன்றுமெனும் பயமோ தாய்க்கு
மிக-நன்றுநன்றுனது செல்வாக்கு
ஆஹா கண்டோ முனது மனப்போக்கு
பர-மண்டலத்தினி லண்டரெத்தனை
தொண்டிசைத்தடி தெண்டனிட்டிடும்
அரசீ நினது கிர்பாநோக்கு-என்றும்
அகலாதிருக்குமடி யோர்க்கு
ஆழக்கடல் குளித்து
மாமுத்தது படுத்துச்
சீர்மிக்குலவு மதிகுலமே
திருமந்திரமா நகர்த் தலமே
வளர்-சிம்மாசனத் தெழுந்த நலமே
பர-தவர் தமக்குய ரடைக்கலமே
வினை-நீங்க வற்புத மோங்ரு பொற்கர
மேந்து தற்பர னேர்ந்துபெட்புற
வேண்டுவாய் அமிர்த பொற்கலமே
எம்-விண்ணப்ப மிது நற்கோகிலமே.
—-

திருமந்திர நகரில் திருக்கோவில் கொண்டெழுந்தருளி யிருக்கும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச் சரிதை.

இந்த நீண்ட கட்டுரை 1947ல் வெளிவந்த பனிமய மலரில் இருந்து எடுத்து இங்கு தரப்பட்டுள்ளது.
இதை ஏன் தரவேண்டும் எனும் வினா உங்கள் உள்ளத்தில் உதிக்கலாம். எமைப் பொறுத்தவரை இதை இவண் வெளிர்க்கொணர்வதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

அவையாவன:-
1. நம் திருவன்னையின் சிரமேற் சிங்காரிக்கும் திருமுடி, 1920ல் களவாடப்பட்டு, களங்கப்படுத்தபட்டு, பின் கண்டுபிடிக்கப்பட்டு, மாசு நீக்கி மீண்டும் கிரீடதாரணம் செய்யப்பட்டது எனும் சரித்திரம், நம்மில் எத்தணை பேருக்குத் தெரியும்.இச் சரித்திரத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பேராவலின் பேரில் இது இங்கு வெளிக் கொணரப்பட்டுள்ளது.

2. இதை எழுதிய வித்துவான் திருமிகு M.A.பீரிஸ் அவர்களின் தமிழ் அலங்கார நடைதனையும் அவர்தம் கற்பனைவளதினையும் விவரிப்புபுலமையும் நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படி அலங்காரத்தமிழ் திரு.பீரிசின் பேனாமுனையில் இருந்து கசிந்தது என்பதை பறைசாற்றுவதற்கு இது பிரசுரிக்கப்படுகிறது.

3. மாதா மீது நாம் கொண்டிருந்த பரவசப் பக்தியையும் அதை வெளிப்படுத்தும் முறைகளையும் இக்கட்டுரை வெளிக்கொணர்வதால் இது இவ்விடம் பிரசுரிக்கப்படுகிறது.

4. படியுங்கள்……………………………… மகிழுங்கள்………………………………………….

*திருமந்திர நகரில் திருக்கோவில் கொண்டெழுந்தருளி
யிருக்கும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ்
ஆண்டவளின் திருமுடிச் சரிதை.*

_(வித்வான் எம்.ஏ. பீரிஸ் அவர்கள், 1920ல் எழுதியது)_

பரமதயாநந்த பரமேஸ்வரியாகிய பரிசுத்த பனிமயத் தாயின் திவ்விய மங்கள வருக்ஷோத்ஸ்வம் பரம்பரையை அநுசரித்து 1920 ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 தேதி வயாகிய சுபதினத்தில் சர்வாடம்பரங்களுடன் இனிது நிறைவேற்றப்பட்டது. பரமதாயின் பக்தர்கள் அனைவரும் தத்தமக்குரிய இக்ஷ்ட சித்திகளைப் பெற்று மிழ்வராயினர்.இதில் ஒரு விக்ஷேசத்தைக் குறிப்பிடுதல் அவசியம். அதாவது பரம தேவதாயின் விக்ஷேசப் பாதுகாவலை விடாது தழுவி நிற்பவர்களாகிய பரதகுலத்தவர்களின் கல்வி, செல்வாக்கு, நாகரிகம் முதலிய அபிவிருத்திகளின் பொருட்டு பரத கான்பரென்சு எனும் முதலாவது மஹா ஜன சபை ஸ்தாபிக்கப்பட்டது, இத்தினமகாலின், ஏனைய வருக்ஷங்களிலும், பாரத மாதாவாகிய அர்ச் பனி மயத்தாயின் திவ்ய உத்ஸவமானது பரத குலத்தவர்களுக்கு விக்ஷே குதூகலத்தையும் உத்ஸாகத்தையும் உண்டுபண்ணத் தக்கதாயிருந்ததென்பதில் ஆக்ஷேபமின்று.

நெடிய மயக்கத்தைக் கொன்று ஜெயவிருதேந்திய மஹோந்நத மஹா இராணியாகிய பரிசுத்த பரம அன்னையின் திரு வருக்ஷோத்ஸ்வம் பூர்த்தியான ஆறவது தினமாகிய 1920 ஆண்டு ஆகஸ்டு மீ 10 தேதி , செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் அவ்வன்னை எழுந்தருளி யிருக்கும் தேவாலயத்தின் மணியாவது அலங்கரிக்கப்பட்டது.

இம்மணியோசை நகரத்தையே நடுங்க வைத்துவிட்டது. யாது சம்பவித்ததோ வென்ற மனத்திராய் யாவரும் அர்ச் பனிமயத் தாயின் தேவாலயத்தை தேடி ஓடி வந்தனர். சில நிமிக்ஷங்களுக்கெல்லாம் சிறுவர், வாலிபர், வயோதிகர், ஆண், பெண் அனைவரும் எள்ளிட இடமின்றித் தேவாலயத்தில் நிறைந்துவிட்டனர்.

ஹா! பரிதாபகரமான காட்சி
பயங்கரமான காட்சி
நடுக்கத்துற் குரிய காட்சி
நாவாலுரைக்கமுடியாத காட்சி
ஐயோ! சர்வலோக இராக்கினியாகிய
பரிசுத்த பனிமயத் தாயின்
கோடி சந்த்ரப்ரபையை
யொத்து விளங்கும் வதன மண்டலம்
விசனத்திலடிபட்டு விளங்குகின்றது. எத்தகைய கவலை, படை, துன்பங்களையும் மாத்திரைப் பொழுதில் போக்ககூடிய கருணாசாகரமாகிய கிருபாநேத்திரங்கள் பார்த்தவர்கள் மனதைப் பதைப்புறச் செய்யக்கூடிய வியாகூலத்தைக் கொண்டு விளக்குகின்றன. அன்பும், புன்னகையும், அமைந்தொழுகும் செம்பவழ வாய் வாடிய குமுத மலர் போன்று சோகமயத்தை யடைந்திருக்கின்றது காணுந்தோறும் ஆநந்தாமிர்தத்தை அள்ளியிறைக்கும் பரமதேவதாயினது திவ்விய சொரூபத்தோற்றம் யாவருள்ளத்தையும் நடுங்குறச்செய்து தேகம் மயிர்க்குச் செறிய ஆலயமுழுவதும் அம்மா! அம்மா!! தாயே! தாயே!! மாதாவே! மாதாவே!! என்ற கூக்குரலைக் கடல் முழக்கோ வென்றெண்ணும்படி உண்டுபண்ணி விட்டது.

ஐயோ! பரிதாபம்! ஆற்றோணைத்துக்கம்! அடக்கமுடியாத கக்ஷ்டம் அறியமுடியாத சம்பவம். என்னை? ஸ்வர்ணகசித ரத்னசிம்மாதனத்தின் மீது திருக்கோவில் கொண்டிருந்தாளாகிய எமதாத்தாளது ஈராறு தாரகை பூத்த, எழின்மிக்க சிரோபாரத்தை அழகுசெய்து கொண்டிருந்ததாகிய வெண் பொற் கிரீடத்தைக் காணவில்லை.

ஐயோ! அம்மட்டுமா? எமதன்ணையின் திவ்விய கரத்தில் செவ்விய அன்னம்போல் அமர்ந்து குறுநகை புரிந்து கொண்டிருந்த திruக்குழந்தையாகிய எம்பெருமான் திவ்யஜேசுவினது சென்னியில் மின்னிக்கொண்டிருந்ததாகிய வெண்பொற் கீரிடத்தையும் காணவில்லை.

திரியுக இராஜேஸ்வரியாகிய எமதன்னைக்கும் எவ்வுயிர்க்கும் இறைவனாகிய எமதப்பனுக்கும் ஏக காலத்தில் இவ்வித நிந்தை ஏற்படுமெனில் அதை யாரே சகிக்க வல்லார்?
உணர்விலந்தார் பலர்
உரையிழந்தார் பலர்
மதியிழந்தார் பலர்
மனசிழந்தார் பலர்
உடல் மறந்தார் பலர்
உடனயர்ந்தார் பலர்
ஆலய முழுவதும் கண்ணீருங் கம்பலையுமேயன்றி வேறில்லை.
மாதர்கள் ஒருபுறமாய் நின்று ஆற்று பெருக்கோ அல்லது ஊற்றுப் பெருக்கோ எனக் கண்ணீரைப் பெய்து மாதாவே! மாதாவே!! மன்னித்தருளும்! மன்னித்தருளும்! என்றிரங்கி விம்மி விம்மி யழுததொலி எவ்விதத்தானும் அடக்க முடியாததாயிற்று. குருப்பிரசாதிகளும், திருப்பணியாளரும் ஏனையோரும் ஆலயத்தின் தளம் முதல் முகடு வரை ஒவ்வொரு யிடத்தையும் தேடிப்பார்த்தனர். காணப்படவில்லை. சஞ்சலம் விர்த்தியாகின்றது. சாந்திக்கிடமில்லை. அனற்பட்ட மெழுகாய் அகங்கரைகின்றனர். ஆலைவாய்க்கரும்புபோல் அங்கலாய்க்கின்றனர்.

ஆலயத்தின் உட்புறத்தில் பாடகர் ஸ்தலமாகிய மேடையின் கிராதிகளில் கனத்ததும், மெல்லியதுமாகிய இருகயிறுகள் கட்டிக்கீழே தொங்கவிடப்பட்டிருந்தன. கனத்தகயிறு ஆலயமணியில் கட்டியிருந்ததாகும். அக்கயிற்றின் வழியாக மேலேறிப்பார்க்கும் வெளிப்புறத்திலிருந்து வரக்கூடிய மேடை வாசல்கள் திறக்கப்பட்டிருந்தன. கள்வர், திருடர் என்ற பேரிரைச்சல் கிளம்பிற்று. மூலைமுடங்குகளெல்லாம் தேடினர். கள்வரையும் காணோம். கனகசோபித முடிகளையும் காணோம்!!

ஹா! துரோகம்!! சகல நலன்கட்கு ஊற்றாகவும், உறைவிடமாகவும் இருக்கக்கூடிய எம்பெருமாட்டியின் திருச்சிரசை தீண்டுவொர் யார்? திருடுவார் யார்? பேய்க்கும் அரிதன்றோ?

அங்ஙனமிருக்க களவாடினர் மானிடராய்க் கொள்ளுதல் எங்ஙனம்?
ஐயோ! முன்னம் எம்பெருமானாகிய திவ்ய ரக்ஷகனை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த பன்னிரு சீடர்களிலொருவனாக யூதாஸ் ஸ்காரியோத் எனும் கொடிய பாவியின் செய்கையை யொப்ப நயவஞ்சகமாகச் சென்று எமது தாயின் முடியைக் கவர்ந்தார்போலும்.

சேயனுக்குள்ளது தாய்க்கிராதா? யூதாஸ் ஸ்காரியோத் தன்னைக் காட்டிக் கொடுக்க இசைந்திருந்த பெருங்குணம் அவனை ஈன்றெடுத்த எமதன்னைக்கில்லாதொழிதல் எங்ஙனம்? ஆனதுபற்றியே சண்டாளர்கள் நமதன்னையின் திருச்சிரசைத் தீண்டவும் திருமுடியைத் திருடவும் இசைந்தாளன்றி வேறில்லை யென்பதே துணிவு.
ஹா! அம்மா! நின்கருணயை எவ்வாறுரைப்பது.
உரைக்கவும் நினைக்கவும் முடியாத
கருணாகரச் சாகரமே-
நினது தாசர்களாகிய எங்களுக்குத்
துன்பிழைத்ததாகிய அலகை இன்றும்
என்றும் நினது திருவடித் தாமரைக் கீழ்
ஓய்வொழிவின்றி நசுங்கி அல்லற்பட்டுக்
கொண்டிருக்க நினது திருமுடி கவர்ந்து செல்லத் துணிந்த அலகையினும் கொடிய அவ்வலகையை அக்கணமே நீறாக்க நினையாது அக்கொடிய எண்ணம் நிறைவேறச் சிரந்தாழ்த்தியது புதுமையன்றோ?
அமலோற்பவி! மன்னுயிர்க்காக்கத் தன்னுயிர் துற என்ற மஹா வாக்கியத்தின் பெருமையை நின்னிடம் கண்டோம். நிகரற்ற நின்துணை நீடு வாழ்க!
எவ்வித பிரயத்தனங்களும் பலிக்கவில்லை. அழுததைத் தவிர விமோசனத்திற்கிடமில்லை. தாயும் மகனும் காணப்படும் முடியிழந்த தோற்றமானது கன்னெஞ்சனையும் விடாது கதற வைத்துவிட்டது.
எல்லோரும் அழுது கொண்டிருக்கும்போது எவர் அமர்த்துவார் அழுகைதனை பரமதேவதாயைத் தவிர!

அவளே! அம்மா! தாயே!! மாதர்க்கரசியே!! மக்களின் அழுகையை அமர்த்தினாள்.
அற்புதம்! அற்புதம்!! சில வினாடிகளுக்குள் எங்கும் நிர்சப்தமாகி விட்டது. எல்லோரும் முழந்தாளிட்டனர். தேவதாய்க்கும் அவளது திருக்குமாரனுக்கும் சேர்ந்து போன நிந்தைக்குப் பரிகாரமாக ஐம்பத்துமூன்று மணிச்ஜெபமும் மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற ஜெபமும் ஜெபிக்கப்பட்டது.
ஊரும் காலும் ஒடுங்கிய நேரம்
மானிட வியாபக ஒதுங்கிய வேளை
வியாகுலமானது ஊடறுத்துக் கொண்டிருக்கும் சமயம்
கண்ணீர் பிரவாகம் சுனையினின்று
எழுந்தாற்போல் பொங்கித் தாரை தாரையாய்
வடிந்துகொண்டிருக்கின்ற சந்தர்ப்பம். இத் தருணத்தில் ஜெபிக்கப்படும் ஜெபமானது எத்தகைய உருக்கமும் பக்தியுடைத்தான தாயாருக்கு மென்பதையெடுத்துரைத்தல் இயலாத விக்ஷயம்.

ஹா! பெருமூச்சும் விம்முதலும் அழுகையும் கலந்த மந்திரஒலியானது திவ்யதாயின் திருச்செவிகளின் வழியூடுருவி அவனது திவ்ய திரு ஹிருதயத்தை வதைத்ததாகிய வாதனையை எமது தாய் சகிக்க முடியாதவளாய் அவள் புரிந்தருளிய அற்புத நலத்தை எந்த நாவைக் கொண்டு புகழ்வது.

ஐம்பத்துமூன்று மணிச் ஜெபமும் ‘மிகவும் இரக்கமுள்ள தாயே’ என்ற ஜெபமும் முடிந்தன. அப்பால் அர்ச்செயசிக்ஷ்ட கன்னிமரியாளின் தஸ்நேவிஸ் மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற இறுதிச் ஜெபத்தை மும்முறை உச்சரித்து முடியும் தருணம் ஹா! என்ன அற்புதம்! மேக கர்ச்சனையை நேர ஒரு பேரொலி ஆலயமெல்லாம் அதிரும்படி கேட்கப்பட்டது இவ்வளவே எல்லோரும் வெளிவந்தனர். அகப்பட்டன! அகப்பட்டன என்ற பேரிரைச்சல் அண்டம்மதிர்ந்தன.
அற்புதம்! அற்புதம்!! என்ற ஓசையானது நாலு திக்குகளிலிருந்தும் சப்திக்கின்றது. திருமுடிகளைக் கண்டுகுளிரக் கண்டு தெரிசிக்க வேண்டுமென்று அவாவினால் இழுக்கப்பட்டு ஜனங்களனைவரும் ஒருவரோடுஒருவர் மோதிக் கொண்டு கூட்டத்தினிடைப் புகுவராயினர். இஃது பெருந்துயரத்தைத்தருவதாயிருந்தது. உடனே, எவ்விடத்திலிருந்தபோதும் எக்காலத்தில் எல்லோரும் கண்குளிரக் கண்டு தெரிசிக்கும்படி உயிர்த்த ஓரிடத்தில் எமது தாயானதும் அவளது திருக்குமாரனதும் திருமுடிகள் ஸ்தாபிக்கப்பட்டன.

ஹா! பயங்கரம். அழகிய முடிகள் நசுங்கப்பட்டு அழகிழந்திருந்தன. சில தாரகைகளும் அத்தாரகைகளையேந்தி நிற்கும் வில்வளைவுகளில் சிலவற்றையும் காண முடியவில்லை. எனினும் எல்லோரும் இனிது தெரிசித்துத் தாயானது அதியற்புத விக்ஷேக்ஷத்தைக் கண்டு வாயாரப் புகழ்ந்து அவரவர் இல்லம் புகுவாராயினர்.

மேற்கூரிய திருமுடிகள் இரண்டும் தேவாலயத்துக்கெதிராக கடற்கரையருகில் செப்பனிட்டு வைக்கப்பட்டிருந்த இருப்புப் படகுகள் ஒன்றினுக்கடியில் கண்டெடுக்கப்பட்டன. சதியர் யாரோ தென்படவில்லை. தேவதாயும் க்ஷமித்துவிட்டனர். தேவதாயின் அன்பும் பாதுகாவலும் விக்ஷேக்ஷமாய்ப் பரதகுலத்தவர் மத்தியில் பிரகாசிக்குமாக,

இஃதிங்கனமாகத்;
தீயர்களால் தீண்டப்பட்ட அத்திருமுடிகளை நன்கு செப்பனிட்டுக் கிரீடதாரணஞ்செய்யத் தினங்குறிப்பிடப்பட்டது.

1920 செப்டம்பர் மாதம் 9 ம் தேதி வியாழக்கிழமை முதல் 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கிரீடதாரண உஸ்தவம் வெகு சிறப்பாகவும், வெகு கம்பீரமாகவும் நடைபெற்றது.

எமது நகர்ப்பங்கு விசாரணை மிகவும் சங்கைக்குரிய A.மோனீஸ் சுவாமியவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து இவ்வுத்ஸவத்தை மிகு விமரிசையாகக் கொண்டாடினர். திருவிழாவின் கடைசி தினத்திற்கு முந்தின தினமாகிய சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நிந்தை பரிகார ஆராதனை செய்யும் பொருட்டாய் திவ்ய சற்பிரசாத எழுந்தேற்ற ஸ்தாபகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. கடைசித் தினமாகிய ஞாயிற்றுக்கிழமை பாடற்பூசை, தேவராதனை முதலிய சடங்குகள் நிறைவேறியபின் மிகவும் சங்கைக்குரிய A.மோனீஸ் சுவாமியவர்கள் பிரசங்கத் தொட்டியிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை கேட்போர் மனது பரவசமாகும் வண்ணம் திவ்ய தாயினது பிரபாவங்களை வாசாமகோசரமாய்ப், பாலுந் தேனும், பாகும் பழமுங் கலந்து ஊட்டியது போல் பிரசங்கமாரி பொழிந்தனர்.

அப்பால், கனம் சுவாமியவர்களால் பரலோக பூலோக ராஜேஸ்வரியும் , பாவிகளுக் கடைக்கலமும், எழு கடல் துறைக்கும் நாமுண்டென்று பிசகாத அரணாயிருப்பவளும் , பரதர் பாதுகாவலும் , மாதாவுமாகிய திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கும் அவளது திருக்குமாரனுக்கும் கிரீடதாரணம் செய்யப்பட்டது.

சந்தோக்ஷ ஆரவாரகீதங்கள் கோக்ஷித்தன. பரம தேவதாயை யாவரும் தெரிசித்து அவளது திருப்பாத முத்திசெய்து, இக்ஷ்ட சித்திகளைப் பெற்றுச் செல்லுமாறு திவ்ய சொரூபத்தைப்பீடத்தின் மத்தியில் ஸ்தாபகம் செய்து வைக்கப்பட்டது.

அவ்வாறே காலை முதல் மாலை வரை பரதகுலத்தினர் யாவரும் ஏனைய கிறிஸ்தவர்களும் இடைவிடாது தெரிசித்துப் பாதமுத்திசெய்து செல்வாராயினர். இரவில் பஜனை கோஸ்டியர் மேலதாளங்களுடனும் தேவதாயின் சித்திரப்படத்துடனும் தேவதாயின் பிரபாவங்களையும் பிரஸ்தாசம்பவங்களையுங் குறிப்பிடக்கூடிய பாட்டுக்களைப்பாடி ஊர்வலம் வந்தனர்.

பரதகுல மக்கள் வார்த்தைப்பாடு

இந்த கீழ்க்கண்ட வார்த்தைப்பாடு 258 ஆண்டுகட்கு முன் நம் முன்னோர்களால் தஸ்நேவிஸ் மாதாவுக்குத் தரப்பட்டதாகும்.
இது 1947 ஆண்டு வெளிவந்த பனிமய மலரில் காணப்பெற்றது. இதை இப்பொழுது வெளிக்கொண்டு வருவதின் நோக்கங்கள் மூன்றாகும்.
1) இதன் பழமையை வெளிப்படுத்துதல்: 258 ஆண்டுகட்கு முந்திய வார்த்தைப்பாடு இது.
2) நம் முன்னோரின் மாதா பக்தியையும் மாதாவிற்கு நம் சமர்ப்பணத்தையும் வெளிக்கொணர்தல்.
3) இதில் நம் முன்னோர்களால் எழுதப்பட்டுள்ள தொன்மைத் தமிழ்தனை வெளிக்கொணர்தல்.
_இதைப் படித்து மகிழுங்கள்……._

193 வருஷங்களுக்கு முன்
எழுகடற்றுறைக்கும் ஏக அடைக்கலமும் பாதுகாவலும்
பரதர் மாதாவாகிய திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு
பரதகுல மக்கள் சமர்ப்பித்த வார்த்தைப்பாடு

(அசலையே பிரசுரித்திருப்பதால் பிழைகளைத் திருத்தி வாசித்துக்கொள்க.)

இசேசு முன்னிற்க.
சவாது

*அர்சியசிக்ஷ்திரீத்துவத்தின் திருநாளன்று சாந்தமரிய தசுநேவிஸ் ஆண்டவளுக்குத் தூத்துக்குடி ஊராராகிற நாங்கள் கொடுக்கிற வார்த்தைப்பாடு.*

சினேகத்துக்குப் பாத்திரமாகவும் எங்களுடைய ஒரே பாதுகாவலுமாயிருக்கிற தசுநேவிஸ் மாதாவாகிய ஆண்டவளே. உமது மேலான திருப்பாதத்திலே மிகுந்ததாட்சியுடனே சாக்ஷாங்கமாகவிழுந்து உமது அடிமைகளாயிருக்கிற எங்கள் பேரிலேயும் தூத்துக்குடியாகிற இந்த ஊரின் பேரிலேயும் .

யித்தைவரைக்கும் நீர்பாதுகாத்துக் கொண்ட கனமான அடைக்கலத்துக்காக மிகுதியும்நன்றியறிகிறோம். யின்னமும் பாதுகாவலினாலே பஞ்சம் படை வியாதி முதலான துரிதங்களில் நின்று எங்களை ரெட்சித்துக் கொண்டதினாலும் நன்றி அறிந்த மனதுடனே நமஸ்காரம்பண்ணுகிறோம். நாங்கள் பாவம் நிரம்பினவர்களானாலும் உமது திருக்கரத்திலிருக்கிற திவ்ய கொமாரன் எங்களுடைய குடும்பத்தின் பேரிலேயும் சமுத்திரத்தின் பேரிலேயும் காண்பிச்சுக்கொண்டு வருகிற தேவ யிரக்கத்தை யெப்போதும் கண்டுவந்தோமே. அப்படியிருந்தாலுமித்தை வரைக்கும் எங்களுக்குச் செய்திருக்கிற அத்தனை உபகாரங்களுக்கும் நன்மைகளுக்கும் கூடின மட்டும் பிரத்தியுபகாரஞ்செய்ய வகையறியாதவர்களாயிருந்தோம். ஆனால் நீர் பாவிகளுடைய அடைக்கலமானதினாலே எங்கள் பேரிலே யிரக்கமாயிருந்து எங்களுடைய அறியாத் தனத்தை மனசிரங்கவேணும். அதேனென்றால் யின்று முதல் நன்றியறிந்த மனதுடனே பிரதியுபகாரமாக வார்த்தைப்பாடு சொல்லுகிறோம். யித்தைவரைக்கும் உமது யிஸ்தோத்திரமாகத் தேரிசு செபம் பண்ணுகிறதுக்கும் கோவில் சடங்கு முதலான தேவஆராதனைகளிலேயும் சுறுசுறுப்பன்றியே, சோம்பலுள்ளவர்களாயிருந்தோமே. யினி மேல்வரை கூடினமட்டும் எங்களுடைய ஆற்றுமசரீரத்தை உமதுபணிவிடைகளிலே காணிக்கையாகக் கொடுக்கிறோம். இதுவல்லாமல் உமது தேவாலயத்தின் திருப்பணிக்கு எப்போதுஞ் சங்குகுழிக்கிற காலத்திலே குழியாள்க்கள் நாள் ஒன்றுக்குச்சனம் ஒன்றுக்கு ஒறு காசும், பிரஊர்த்தோணி முதலான உருக்களிலேவருகிற யாபாரத்தில் ஊர்ஆதாயம் வாங்குகிறதில்பத்துக்குமூன்றும், மீன்பிடிதோணிமஞ்சிகளெல்லாம் தோணி ஒன்றுக்கு ஒருஆள்ப்பங்கும்பிலால் வலைகாரர் , களங்கட்டிகளும் ஒவ்வொருஆள்ப்பங்கும், கொம்பஞ்ஞியப்பணிவிடைமுதல் மற்றுமிந்தத் துறைமுகத்தில் யேற்றுமதி இறக்குமதிக்கும் , ஒவ்வொரு ஆள்ப்பங்கும், சல்லியேத்துகிற மஞ்சி ஒன்றுக்குப்பத்துக்காசும், கச்சைப்பிடவையாபாரிகள் அவர்களுக்குற்காணுகிற பிரயோசனத்தில் ஒரு ஆள்ப்பங்கும், உள்ளூர்க்குடியானவர்கள் முதல்ப்பிறவூரிலிருந்து தவசதரனிய முதல்மற்றும் யாபாரம் ஏற்றிவருகிற உருக்கள்முதலான தோணிமஞ்சிகளுக்கு அணுவுக்கு ஒரு பணமும் கொடுப்போமென்று யெப்போதைக்குமாக வார்த்தைப்பாடுகொடுக்கிறோம்.

எங்களுடைய கனமானகடனுக்குப் பரலோகத்தினுடைய ராக்கினியே யிதுகொஞ்சக்காணிக்கையானாலும், திருச்சமூகத்துக்குச்சந்தோக்ஷம் வருத்துவிக்கிறதுக்கு மிகுந்த ஆசையாயிருக்கிறோம். யிரக்கருணையுள்ள ஆண்டவளாகிற தசுநேவிஸ்மாதாவே கையேத்துக்கொள்ளும். அதேனென்றால் யித்தோடேகூட எங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் பத்தியும் அடிமைத்தனத்தையும் இந்தப்பட்டணத்தையும் முழுதும் பாதகாணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோம்.

உமது திருக்கோமாரன்பேரிலுண்டான மெய்யான பக்கிக்ஷத்தையும் உம்முடைய பேரிலுண்டான நேமத்தையும் யிழந்துபோரதைப்பாற்க ஆயிரமுறை எங்களுடைய ரெத்தஞ்சிந்துகிறதுக்கு விருப்பமாயிருக்கிறோம்.

கிறுபைதயாபத்துக்குக் மாதாவே யிந்தஉம்முடைய பட்டணத்தை உமது யிரக்கமுள்ளதிருக் கண்களினாலேபாத்தருளி சகல பொல்லாப்புகளில் நின்றுரெட்சித்துக் கொள்ளும். விசேக்ஷமாய் எங்கள் பாவத்தினாலே வரத்தக்க சறுவேசுரனுடைய கோபத்தில்நின்று ரெட்சித்துக்கொள்ளும்.

சாதுகுணமுள்ள கன்னியாஸ்திரியே எங்களுடைய நம்பிக்கையானவளே உமதுமக்களாயிருக்கிற எங்களுக்கும் எங்களுடைய பட்டணங்களுக்கும் சமுத்திரத்துக்கும் ஆசீர்பதித்தருளும். யிந்த உமதுமகாபெரிய ஆசீர்பாதத்தோடே உம்முடைய திவ்விய பாலனுடைய வல்லமையுள்ள ஆசீர்பாதத்தையும் கொடுத்தருளும். யிப்படியே யிந்தலோகத்திலே உமக்கியன்ற நல்லஊளியஞ்செய்து மோக்கிக்ஷராட்சியத்திலே உம்மைச் சந்தோக்ஷத்துடனே கண்டுகளிகூருவோமென்கிற நம்பிக்கையாயிருக்கிறோம். ஆனால் நாங்கள் கொடுத்த வார்த்தைப்பாட்டின் நினைவு அழியாதபடிக்குச் சறுவேசுரனுடைய மாதாவாகிய தசுநேவிஸ்நாயகியே அடியேன்களுடைய பாத்திரமில்லாதபேர் உம்முடைய திருப்பாதத்திலே எழுதிவைக்கிறதுக்கு உத்தரவு தந்தருளும்.

தூத்துக்குடியில் சூஎளருயச ளூ ஆனிம கூ
யோசேமரீய தெவலாசி யேசுசபைச் சன்னியாசியார் நாளையில் அவர்கள் கையொப்பமும் பதிவிச்சு அதின் கீழே அவ்வேளைத் தலைமையாயிருந்த.
கவரியேல் கோமுசு, சாதித்தலைவமோர்.
பேதுரு கோமுசு பர்னாந்து உள்ளூர்த்தலைவமோர்.
சூசையின்னாசிக்குருசுக்கொறேய, கொம்பஞ்ஞிய அடப்பனார்
சவியேரின்னாசிக் குரூசு மெச்யகணக்கப்பிள்ளைமோர்.
சல்வதோரேன்றீக்தற்குரூசு துப்பாசிமோர்.
இவர்கள் கைஒப்பம்வைத்துக்கொடுத்திருக்கிற வார்த்தைப்பாடு.
இதின்அசல் துப்பாசிபட்டி சர்வேஸ்பான் கோயில் அக்தார் அவர்களிடமிருக்கிறது.

பனிமய மாதா பேரில் பதிகம் – 5

சேதார நறிய கனி முருகவிழ
முட்புறத்து தீங்கனி உகுத்த தேனும்
தேம்படுமரம் பைதரும் மென்பழம்
உகுத்திடும் தேறலும்
குறைபடாது தினமும் பெருக்குற்று
மடையூபாயும்
நற்செந்நெல் வயல் சூழ ஓங்கும்
திருமந்திர நகரில் எழும்
அருமந்திரத்தில் உறை
திவ்ய பனிமய அன்னையே

107மிக்க உயர்தயை உடைத்தாய்
உனது அடைக்கலம் விரைவில் வந்து
அடி பணிந்து உன் மேலான உபகார உதவியை இரந்து
நின்னை வேண்டினவர்
எவரேனும் மேதினிதனில் கைவிடப்பட்ட்தில்லையென விளம்புவது வீண்கதை கொலோ
வித்தகம் மிருந்த பல உத்தமரெல்லாம்
இதனை மெய் எனச் சாட்சி தந்தார்

தக்க உனது அமல சுதன் உயிர்விடும் தருணம்
நின் தனையராய் எமையளித்துத்
தாய் என எமக்கு உனைத் தந்த
வாக்கு அதனையும் தாயே மறந்தனை கொலோ
தமியர் யாம் இத்தலத்தே எளியராய்
உதவியிற்சாரும் ஓரிடமும் இன்றித்
தளர்வுற்று
மெலிவதைத் தெரியாது போல
நீ சாதித்தல் பேரளிகொலோ

கொக்கென விளங்கு நின் உபயமலரடிகளே
சோரா அடைக்கலம் எனத்
துரித்த்தின் நாடி வந்து
அழுது பயவிழி கண்மழை சொரிய
போல் நீர் உகுப்ப சும்மா அகவன்மின்
என எம்மை நீ தள்ளாது
தோன்ற நின் மகவை வேண்டிச்
சூகுண பரிபாலியே
கிருபை மழை சொரிய அருள் சோராது
இரங்கு அம்மணீ

திக்கு எல்லாம் சூழ
உஎயர் ஆலை தரும் புகையினை அமுதமென உள்ளித்
தீங்குரல் குயிலினம் வாய்விடர்
தயாவுந் தேனோடு வண்டு பாடச்
செய்ய பைந்தோகைவுடை மயில் மகிழ்ந்தாடிடச்
சீர் பெருகும் வளம் அமர்ந்த
திருமந்திர நகரில் எழும்
அரு மந்திரத்தில் உறை திவ்விய பனிமய அன்னையே!

கீர்த்தனை

தாய் நீயே அல்லால் வேறு எவர் உண்டு அம்மா?
தாய் நீ; பரதர் தம் தாய்; நீயே !
ஆய் நீ! எமக்கு இங்கு, அனுக்கிரகம் செய்யும் அன்னை நீ,
அல்லால் வேறு எவரும் உண்டோ?

அம்மா! அம்மா! மூவுலக அரசியே
அநவரதமும் எம்மைக் காப்பாயே!

உலகத்து எமை வகுத்தளித்து அழித்திடும் ஓர்
உவமை இல்லாத முப்பொருள் ஒருவன்
அலகில் வரமுடை உனது திருச்சுதன்.
அன்னை நின் வேண்டலை, மறுப்பானோ?

பாரினில் எய்திடும் பற்பல துயரம்
பரதவர் தமக்கு இங்கு அணுகாமல்
ஆர்வமோடு இரங்கி, நல் தயை புரிந்தே
ஆதரிப்பது, உன் கடனாமே!

சந்திரனைத் திருப்பதத்து அணிந்தாயே!
சந்திர குலத்தவர்க்கு அடைக்கலமே!
அந்த முறும் உனது தாள் துணை தந்தே
ஆட்கொள்வாய்;
உனது அடியாரை நீ!

இப்பதிகம் இத்துடன் முடிவுற்றது. இப்பதிகத்தில் குறிப்பிடபட்டுள்ள சில சம்பவங்களின் விளக்கம் எமக்கு தெரியவில்லை. ஒருவேளை மாதாவியல்( Mariology) படித்தவர்கட்கு தெரிந்திருக்கலாம். தெரிந்தவர்கள் தெளிவு படுத்துவார்களின், இந்த பதிகத்தை மேலும் சுவைப்பதற்கு அது வழிவகுக்கும் என்பதால், அன்னாரை இது குறித்து எழுதுமாறு விழைகிறோம்.

Caesar Frederic on Pearl fishing — 1600 AD

by A.X Alexander

Caesar Frederick the celebrated Merchant of Venice, like Marco Polo had left detailed notes on the pearl fishery of the Gulf of Mannar.

What Marco Polo wrote on the pearl fishery was already covered in one of our earlier notes. The Pearl fishing spot, he describes, refers to KILAKKARAI, according to Bishop Caldwell. But the observations of Caesar Frederic relate to the pearl fishing at KAYAL or PUNNAIKAYAL.

Caesar Frederic spent eighteen years in India between 1563 and 1581 and his visit to Tinnevely and the scene of pearl fishery is generally deemed to be 1563 — period of Portuguese domination in the eastern coast.

His report is so detailed and graphic that any attempt to tamper it by abridging or expanding would be a great disservice to the pleasures of the readers. Hence , here it is, as it was penned by Caesar Frederic– but of course as translated in English.

“The sea along the coast which extends from Cape Comarin to the low land of Kayal and the island of ZEILLAN (Ceylon) is called the pearl Fishery. This fishery is made every year beginning in March or April, and lasts fifty days. The fishery is by no means made every year at one place, but one year at one place and another year at another place: all however in the same sea.

When the fishing season approaches, some good divers are sent to discover where the greatest quantity of oysters are to be found under water; and then directly facing that place which is chosen for the fishery, a village with a number of houses, and a bazzar, all of stone, is built, which stands as long as the fishery lasts, and is amply supplied with all necessaries. Sometimes, it happens, near places already inhabited, and at other times at a distance from any habitations.

The fishers or divers are all Christians of the country, (Parawa converts) and all are permitted to engage in this fishery, on payment of certain duties to the King of Portugal and to the churches of the Friars of St. Paul on that coast.
Happening to be there, one year, in my peregrinations, I saw the order used in fishing which is as follows ;-

“During the continuance of the fishery, there are always three or four armed foists or galliots stationed to defend the fishermen from pirates.

Usually the fishing boats unite in companies of three or four together. These boats resemble our Pilot boats at Venice, but are somewhat smaller, having seven or eight men in each.

I have seen of a morning ,a great number of these boats go out to fish , anchoring in 15 or 18 fathoms water, which is the ordinary depth along the coast.

When at anchor, they cast a rope into the sea, having a great stone at one end. Then a man having his ears well stopped, and his body anointed with oil, and a basket hanging to his neck or under his left arm, goes down to the bottom of the sea along the rope, and fills his basket with oysters as fast as he can. When that is full, he shakes the rope, and his companions draw him up with the basket. The divers follow each other in succession in this manner till the boat is loaded with oysters and they return at evening to the fishing village. Then each boat or company makes their heaps of oysters at some distance from each other, so that a long row of great heaps of oysters are seen piled along the shore. These are not touched till the fishing is over, when each company sits down beside its own heap, and falls to opening the oysters which is now easy, as the fish within are all dead and dry. If every oyster had pearls it would be a profitable occupation but there are many which have none.

There are certain persons called Chittnis ( Chetty)who are learned in pearls. And are employed to sort and value them, according to weight, beauty, and goodness dividing them into four sorts.

The first sort which are round are named AIA of Portugal as they are bought by the Portuguese.

The second sort which are not round are named AIA of Bengal.

The third which are inferior to the second, are called AIA of Canara which is the name of the kingdom of Bijnagar or Narasinga into which they are sold.(VIjayanagar)

The Fourth or the lowest kind, is called AIA of Cambaia, being sold into the country.

Thus sorted, and prices fixed to each, there are merchants from all countries ready with their money, so that in a few days all the pearls are bought up according to their goodness and weight.

Commenting on this report of Caesar Frederic , The Census report of Tinnevely Census three hundred years later said

“The description of the pearl fishery of Caesar Frederic is applicable to the method of procedure at the present day, as when it was written nearly 300 years ago , except that from some causes but little understood, the banks of recent years have unfortunately ceased to furnish a supply of the valuable oysters yielding the pearl of commerce.”

Commenting on AIA –term used in classification of the pearl, Bishop Caldwell would say as follows;-

‘’It is not clear what word was meant by AIA.
HAYA, horse was the title of the eight varieties of pearls sent by King DEVENIPITISSA in BC 306 to King ASOKA.(Emerson Tennents Ceylon.)
Each of Caesar Frederic’s varieties, however was called The AIA of such and such Kingdom.

Can the ordinary word AYA—Ayam –meaning Tax – have been intended?
This is the impression of the Tuticorin traders as they pay the tax to the Portuguese ; and it was paid in pearls.”

Is there any one to throw more light on this?

Our next, on Pearl fishing will be ” PEARL FISHING IN 1700 –The Dutch Period ’’ as told by the Jesuit Fr. Martin.

PEARL FISHING AS SEEN BY MARCO POLO.

There had been pearl fishing in the South Eastern Coast and Gulf of Mannar from very early times. Ambassadors like Megesthenis and Historians like Pliny and Sencillus and Travellers like Marcopolo have left detailed notes on Pearl fisheries and pearl fishing in our coast , in their chronicles.

The Portuguese, the Dutch and the British had evinced considerable commercial interest in pearl fishing in our coast.

100The pearl fishing in our coast has been a matter that provoked conflicts between Moors and Paravas, between Badagas and Paravas, between the East coast and West coast, between the Jesuits and other priests. Further the rivalry in pearl fishing has been the cause for a massive conversion to Roman Catholic Christianity.

Thus the pearl fishing in the south eastern coast has been an historically important affair.

We in this series of articles attempt to record in verbatim reports of Marcopolo, Martin,and Caesar Frederic who had written about Pearl Fishing.This perhaps would give to our readers verbatim records on Pearl fishing in the ancient times; during the Portuguese period; and the Dutch period.

On the British period we would refer to reports of officers –not perhaps in verbatim– like Hornell.

We in this piece, confine ourselves to what the ancient writers like Megesthenis, Pliny, Sencillus and Marcopolo have said about Pearls and pearl fishing.

991.*Megesthenis* (350 BC—-290 BC), the ambassador of Selucas Nicator refers to a country called PANDAIA and mentions that *it was here that the pearls were procured*.The Pandaia country referred to by Megasthenese is Tinnevely along the coast of which at that time were the chief stations of pearl fishery . (CALDWELL).

2.*Pliny* ( 23 AD —79 AD), the Roman Natural Philosopher as well as Navy Commander of the early Roman empire, quotes Megasthenese and says that the Indian merchants brought their wares to Roman markets ; as to the Greek markets in the past. The article so brought is the Sea Pearl called Margarita.

3. *Syncellus* ( 800 AD ), the Byzantian chronicler says
“Pandian, king of the Indians sends an embassy to AUGUSTUS , desiring to become his friend and ally .’

Bishop CALDWELL commenting on this says ‘ This incident is an interesting proof of the advanced social and political position occupied by the Pandyas, probably in consequence of the foreign trade they carried on at Korkai in connection with the pearl fishery.’

98
4.*Marco Polo* (1254—1324) describes the pearl fishery coast of MABAR. We are to understand by Mabar mainly the coast from Rameshwaram to Cape Comarin, constituting the eastern coast of the Gulf of Mannar. The port referred to by Marcopolo in his notes probably refers to Kilakkarai or Periya pattinam, near Kilakkarai.

Marco Polo writes
’’ when you leave the island of Sellan (CEYLON) and sail west ward about 60 miles you come to the great province of Mabar which is styled the India the greater; it is the best of all the indices and is on the mainland.——— The province is the finest and the noblest in the world. At the end of the province reigns one of those royal brothers (Marco polo says that there were five royal brothers) who is crowned as a king and his name is SONDAR BONDI DEVAR.( Sunthira Pandi Devar)In his kingdom, they find very fine and great pearls. And I will tell you how they are got.
‘’you must know that the sea here forms a Gulf between the island of Seilon and the Mainland. And all around this Gulf the water has a depth of not more than 10 or 12 fathoms. And in some places not more than 2 fathoms. The pearl fishers take their vessels, great and small and proceed into this Gulf where they stop from beginning of April till the middle of May. They go first to the place called BETTOLOR and go 60 miles into the Gulf. Here they cast anchor and shift from their large vessels into small boats. You must know that many merchants who go divide into various companies and each of these must engage a number of men on wages hiring them for April and half of May. Of all the produce, they have first to pay the king as his royalty the tenth part.

And they must also pay those men who charm the great fishers to prevent them from injurying the divers while engaged in seeking pearls and the water, 1/20th part of all that they take.

These fish charmers are termed Abraiaman (Brahmins); and their charm holds good for that day only; for at that night they dissolve the charm so that the fishes can work mischief at their will. These Abraiamans knew how to charm bees and birds and every living thing.

When the men have got into the small boats they jump into the water and dive which will be at a depth of 4-5 fathoms and there they remained as long as they are able. And there they find the shells that contain the pearls and these they put into a net and a bag tied around the waist and mount up to the surface with them and then dive anew. When they cannot hold their breadth any longer, they come up again and after a little Down they go once more and so they go all day.
The shells are in fashion like oysters or sea-hoods. And in these shells are found pearls great and small of every kind sticking in the flesh of the shell fish.

In this manner pearls are found in great quantities, for thence in fact come the pearls which are spread all over the world. And I can tell you that the king of the state has a very great receipt and treasure from his dues upon those pearls.
As soon as the middle of May is passed no more of those pearl shells are found there. It is true, however that a long way from the spot some 300 mile distant, they are also found but that is in September and the first half of November.’’
We will write on pearl fishing during Portuguese times next Saturday.

by A.X. Alexander

Our population in 1947

_by A.X Alexander_
Is it not necessary that we must have a record of the number of our people in different locations?

It is necessary that we must build this record continuously- atleast once a year – to assess the strength of our population ;, to study our status ; to devise plans for our progress in education , industry etc. We have been requesting this but had little response.

Already we have come to know one or two youngsters are now making a study on our population located in different places .

Recording our population and its locale is not a new thought sprung from our brain.. Such an excercise was done just prior to Independence and it was published in the volume of SOUVENIR brought out on August 5th 1947 , on the occasion of the feast of OUR LADY OF SNOWS.

A photo copy of the volume re-constructed by Thiru Sornam Victoria , contains these details .While furnishing those details we express our intention to upload a few articles out of this volume shortly, for two reasons.
1. To update our knowledge about the glory that is no-more
2. To familiarize ourselves with the felicity of Tamil that our forefathers wrote.
96

Villages where Paravas lived and their population—AS FOUND IN THE 1947 SOUVENIR

பனிமய மாதா பேரில் பதிகம் – 2

தெண்டிரை நிகர்த்த புனல் மண்டக தடங்களில் செய்ய செங்கமல மலரும்
திரளும் வால் வளைகளும்
பைங்கழையும் ஈன்ற வைந்திரன் மணிகளில்
வெறிப்பச் செங்குமுதம்
இதழ் விண்டு தீந்தென் சொரிந்திடும்
சீர் பெருகு வளம மர்ந்த
திருமந்திர நகரிலெழு
அருமந்திரத்திலுறை
திவ்ய பனிமய அன்னையே!

94தண்பொழிற் காவில் அன்று
ஆதிதாய் ஏவையை;
சதிசெய; உள்ளத்தில் உன்னிச்
சர்ப்ப வடிவாய் வந்து
மாதினை
அருந்தாது தற்பரன் விலக்கு கனியைத்
தான் உண்ண மயக்கும் வெம்பேயினது
முடிதனை காலால் மிதித்து உடைத்த
சத்துவ மிகுந்த மா உத்தமி !
புகலரும் தயையுடைக் கருணை வாரி!

சண்பகச் சோலை சூழ்ந்தெழிலார்
வலம் செய நகர்தனில்
மேவும் கொள்ளை நோயைத்
தகவுடைக் கருணை கொண்டு
விலகச் செய்து
அவ்வூர் தனைக் காத்தது உலகறியுமே.

தாயே!
நின் மைந்தர் யாகம் செய் தொழிற் குறையினால் , தளர்வுற்று,
மெலிவுற்று
ஒரு தம்பமற்றவராக
வறுமை நோய் கொண்டு
ஈங்கு
தள்ளாடி அலைதல்
தகவோ?

வெண்பிறை பாத காப்பு அணியும் தகவே!
நின் பாதார விந்தமே ஆதாரமாம்.
வேறு ஓர் ஆதாரம்
நினது மகன்;
எங்கட்கு இம்மேதினியில்
வேறே ஏது அம்மணி?
வெய்ய அவ்வறுமை முதல் உறுவ வெல்லாம் நீவ!
மிருது மலர் உள மலர்ந்துன்
மென்கரத்தேந்து திருமைந்தனை இரக்கில்
இவை விலகாது
நிலை நிற்குமோ!

தெண்புனற் பனையில்
தவழ வெண் சங்கு கமலமிசை
திகழ்தரளம் ஈன்று அகலவே
சென்று அதனை
வெண்குருகு தனது கருவென
உள்ளிச் சேர்த்து அடைகிடந்து
வெறிதெ தினமும் ஏமாற
வளம் அமரும்
மாதிருவுடைச்
செந்நெல் வயல் சூழ
ஓங்கும் திருமந்திர நகரில் எழும்
அருமந்திரத்தில் உறை
திவ்ய பனிமய அன்னையே!

முப்புவனமும் தாங்கி
முத்தொழில் நடாத்தும் ஒரு மகனை
நடு முடிவிலானை,
மும் மூன்று திங்கள் உன் உதரத்தில் வைத்து
இந்த மூவுலகும் மகிழ்வு கொள்ள
மூதூரெனும் பெத்திலே நகரின் அருகில்
ஒரு முழையகத்து ஈன்று
திவ்ய முளரிதொழு செங்கரம் தாங்கும்
அருவலமதனை , மூகையாம் புகல வலரோ!

ஒப்பறும் பொழிலார் அலெக்சாந்திரியா நகரில்
உனது எழில் அடைக்கலத்தே ஒப்பித்த
தாய் மகள் இரண்டு உயிரையும்
கொல்ல உன்னும்
ஒரு நீசனு
பய ஒளிவிழி மறைத்து
உனது சரணாடுமிருவரையும்
உவமையறு கருணையுடனே
உயிர் காத்து
ரட்சித்த சரிதைதனை
அறியார் இவ்வுலகில் எவருண்டு அம்மணி!

இப்பகுதியில்
உனது அடியர்
ஏழையா நல்குரவில்
இன்னா அடைந்து
நொந்து
ஏதுமொரு தம்பமற்று
அலைவதைக் காணாது இருந்தையோ! கருணையில்லையோ!
என்னை இது தயைகொலோ!
அன்னை உனது அலர் விழிகள்
எங்கள் மேல் சிறிது நோக்க இது தகுந்த தருணம்
நின் புதல்வனைக் கெஞ்சி
எம் இன்னா ஒழித்து
அருள்வையே

தொடரும்….

பனிமய மாதா பேரில் பதிகம்

இந்த கீழ் கண்ட பதிகம் யாரால் எழுத பட்டது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இப் பதிகம் மிக பழமையானது என்பது தெள்ளதெளிவு . இது தூத்துக்குடியில் பிறந்து சென்னையில் வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்த திரு அந்தொனி மோத்தா அவர்களின் பழைய செப புத்தக தொகுப்பில் காணப்பட்ட ஒன்றாகும். Continue reading பனிமய மாதா பேரில் பதிகம்

மும்பை பரவர் சங்கத்தின் – 12ம் ஆண்டைய விழா

‘‘இயங்காமல் இருப்பதை விட இல்லாமல் இருப்பது சிறந்தது’’ என்ற வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் பிரசித்திப் பெற்ற கூற்றிற்கு ஏற்ப பெயருக்கு அல்லாமல் முற்றிலும் செயல்படும் ஒரு சங்கம் இந்த பரவர் சமுதாயத்திற்கு தேவை என்ற எண்ணத்தின் அடிப்படையில் மும்பையில் பெரியவர்களின் வழிதுணையில் இளைஞர்களின் கரங்களால் தொடங்கப்பட்ட மும்பை பரவர் சங்கத்தின் பனிரெண்டாம் ஆண்டு விழா கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி 2012 அன்று புதன்கிழமை தாதர் அண்டோனியோ அரங்கத்தில் நடைபெற்றது.

92ஆண்டுவிழாவிற்கு மும்பை பரவர் சங்கத்தின் துணைத்தலைவரும் பிரபல தொழிலதிபருமான திரு. ஆர்கே ரூபின் அவர்கள் தலைமை தாங்க அருட்தந்தை ஜெலஸ்டீன் ரொகட்ரீகஸ் ( குஜராத்), அருட்தந்தை ரஞ்ஜித் ஃபர்னாண்டோ ( நவி மும்பை) , தமிழர் களம் அமைப்பாளர் அரிமா வளவன் (திருச்சி), நெய்தல் படைப்பாளிகள் சங்க அமைப்பாளர் திரு. திவாகர் கூஞ்ஞா ( நாகர்கோவில்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு திரு. புன்னை அந்தோனிசாமி ( புன்னைக்காயல்), திரு. மார்சியான் ஃபர்னாண்டோ ( பழையகாயல்) திரு. பென்னட் ஃபர்னாண்டோ ( கூட்டப்புளி) ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டமானது பராம்பரியம் மிக்க பரதகுல திருப்பலி வழிபாட்டுடன் ஆரம்பமானது.

திரு. ராபர்ட் ஃபர்ணான்டோ- திருமதி மெர்லின் ராபர்ட் ( உவரி) ஆகியோரின் புதல்வன் செல்வன் ஆக்னல் இசையில் திருப்பலி பாடல்கள் களைகட்ட விழா தொடங்கியது. திருப்பலிக்கு பின்னர் இறைவணக்கத்துடன் பாடல் ஆரம்பமானது. பின்னர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர் திரு. வெர்ஜில் ஃபர்னாண்டோ வரவேற்புரை ஆற்றினார்.

இதன் பின்னர் மும்பை பரவர் சங்கத்தின் பனிரெண்டாம் ஆண்டைய மலர் வெளியிடப்பட்டது. மலர் வெளியீட்டிற்கு முன்னுரை வழங்கிய பரவர் சங்கத்தின் செயலாளர் திரு. பென்னட் ஃபர்னாண்டோ அவர்கள் மும்பை பரவர் சங்கத்தின் சிறப்புகளுள் ஒன்றான மலர் வெளியீடு பற்றிய பெருமைகளை பட்டியலிட்டார். அதில் பனிரெண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வண்ணமயமான மலர்களை வெளியிட்டு எந்த பரவர் சங்கமும் செய்யாத சாதனையை மும்பை பரவர் சங்கம் செய்துள்ளதை கோடிட்டு காட்டிய போது அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்து அகமகிழ்ந்தது.

91இதன் பின்னர் மும்பை பரவர் சங்கத்தின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கம் போல இந்த ஆண்டும் சுமார் ஏழு மாணவ மாணவியர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. மும்பை கோவண்டி பகுதியைச்சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகன் வறுமை நிலையிலும பி..ஹெச்டி வரை படிப்பில் உயர்ந்துள்ளதை காட்டி அந்த மாணவனை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழாவில் ஊக்கத்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்ந்தது.

இவ்வாறே இன்றைக்கு பிரபல பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரின் குடும்பம் பனிரெண்டு ஆண்டுகாலமாக மும்பை பரவர் சங்கத்தின் கல்வி நிதி உதவியை பெற்று அந்த குடும்பமே இன்று கல்வியில் ஒரு முன்னுதாரணமாக மும்பையில் இருப்பதற்கு மும்பை பரவர் சங்கம் ஒரு காரணமாக இருப்பதை சங்க செயலாளர் அவர்கள் சங்கத்தின் கல்வி சேவையின் பெருமையை குறிப்பிட்ட போது அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்கள் கலங்க வைத்தது. இவ்வாறு மும்பை பரவர் சங்கமானது இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 6 லட்சத்திற்கு மேல் கல்வி நிதியுதவி வழங்கி எல்லா சங்கத்திலும் உயர்ந்து நிற்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இதன் பின்னர் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாறே விதவைகளுக்கு நிதியுதவி, மருத்துவ நிதியுதவி ஆகியன வழக்கம் போல வழங்கப்பட்டன.

மும்பை பரவர் சங்கத்தின் முக்கிய நிகழ்வான வலம்புரி ஜான் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு சிறப்புக்குரிய இந்த விருதானது நெய்தல் படைப்பாளிகள் சங்கத்தின் அமைப்பாளர் திரு. திவாகர் கூஞ்ஞா அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது அரங்கமே அதி்ர்ந்தது. இந்த விருதானது கடந்த ஆண்டு பிரபல எழுத்தாளரான எழிலனுக்கு வழங்கப்பட்டதை அப்போது நினைவு கூறப்பட்டது.

வழம்புரி ஜான் விருதை பெற்றுக்கொண்டு பேசிய திரு. திவாகர் கூஞ்ஞா அவர்கள் பரவர் சமுதாயம் படைப்பாளிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என வழியுறுத்திப்பேசினார். மேலும் மும்பை பரவர் சங்கத்திடம் இருந்து இந்த விருதைப்பெறுவதில் தான் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து மதிய உணவிற்கு பின்னர் நடிகர் சந்திரபாபு விருது நிகழ்ச்சி ஆரம்பமானது. நம் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளை கலைத்திறன்களில் ஊக்கப்படுத்தும் இந்த விருதானது இந்த ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரம் செல்வி ஜெஸ்லின் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விருதானது செல்வி நினோஸ்கா பென்னட் ஃபர்னாண்டோ அவர்களுக்கு வழங்கப்பட்டது அப்போது நினைவு கூறப்பட்டது.

இதன் பின்னர் சிறப்புரையாக தமிழர் களம் அமைப்பாளர் அரிமா வளவன் அவர்கள் கூடன்குளம் அணுமின்நிலையமும் சில நிஜங்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது கூடன் குளம் அணுமின்நிலைய போராட்டம் குறித்து அவர் படிப்படியாக விவரித்து ஒரு சிறப்பான உரையை வழங்கினார். மேலும் இந்த போராட்டத்தின் போது மும்பை பரவர் சங்கம் ஆற்றிய பங்கை விவரித்ததுடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மும்பை பரவர் சங்கம் எத்தகைய மறக்க முடியாத பங்கை ஆற்றியது என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பின்னர் சங்க துணைத்தலைவர் திரு. ஆர்கே ரூபின் அவர்கள் தனது தலைமை உரையில் மும்பை பரவர் சங்கத்தின் பெருமைகளை விளக்கினார். மேலும் வரும் காலத்தில் இந்த சங்கமானது இன்னும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இறுதியில் மும்பை பரவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. புன்னை அந்தோனிசாமி அவர்கள் நன்றியுரை கூற மும்பை பரவர் சங்கத்தின் மற்றுமொரு வெற்றிச் சரித்திரம் கல்வெட்டுகளில் பதியப்பட்டது.